T20 WC அலசல் | பாபர் அசாம், ரிஸ்வான், ஷாஹின் அஃப்ரீடியை மட்டுமே நம்பாமல் வளரும் பாகிஸ்தான் அணி பாயுமா?

நியூஸிலாந்தில் நடைபெற்ற வங்கதேசம், பாகிஸ்தான், நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியது. நேற்று கிறைஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் சற்றும் எதிர்பாராத நிலையிலிருந்து எதிர்த் தாக்குதல் ஆட்டம் ஆடி 163 ரன்கள் இலக்கை அனாயசமாக 3 பந்துகள் மீதம் வைத்து முடித்து சாம்பியன் ஆனது. உலகக்கோப்பை டி20 தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்குவதற்கு முன்பாக இந்த வெற்றி பாகிஸ்தான் அணிக்கும் கேப்டன் பாபர் அசாமுக்கும் பெரிய உத்வேகத்தை அளிக்கும் என்பது உறுதி.
ஏனெனில் இங்கிலாந்துக்கு எதிராக தங்கள் சொந்த மண்ணில் பாகிஸ்தான் நெருக்கமான போட்டியாக அமைந்த டி20 தொடரில் 3-4 என்று தொடரை இழந்தனர். ஆகவே, இந்த முத்தரப்பு தொடர் வெற்றி அவர்களுக்கு பெரிய பூஸ்ட்தான்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/fLMUNjK