T20 WC | “உலகின் சிறந்த காரை கேரேஜில் நிறுத்தி வைத்துள்ளது இந்திய அணி” - பிரெட் லீ

இந்திய கிரிக்கெட் அணி தன் வசம் உள்ள உலகின் சிறந்த காரை கேரேஜில் நிறுத்தி வைத்துள்ளது என டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணித் தேர்வை விமர்சித்துள்ளார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் பிரெட் லீ. இந்திய அணியின் இளம் பந்துவீச்சாளரை சேர்க்காததை அவர் இப்படிச் சொல்லியுள்ளார்.

டி20 உலகக் கோப்பை தொடர் வரும் 16-ம் தேதி தொடங்க உள்ளது. இந்தத் தொடரில் இந்தியா உட்பட மொத்தம் 16 அணிகள் பங்கேற்று விளையாடவுள்ளன. இந்தத் தொடருக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்திருந்தது. அந்த அணியில் இடம்பெற்றிருந்த பும்ரா காயம் காரணமாக விலகி உள்ளார். அவருக்கு மாற்று வீரர் யார் என்பது குறித்த அறிவிப்பு இன்னும் தெரிவிக்கப்படவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/MnDQalq