
ஜிலாங்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் குரூப் சுற்றுப் போட்டியில் நமீபியாவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது ஐக்கிய அரபு அமீரகம். இதன் மூலம் நெதர்லாந்து கிரிக்கெட் அணி அடுத்த சுற்றான சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறி உள்ளது. தோல்வியைத் தழுவிய காரணத்தால் முதல் சுற்றோடு நடையை கட்டுகிறது நமீபியா. வெற்றி பெற்ற ஆறுதலுடன் அமீரகமும் முதல் சுற்றோடு வெளியேறி உள்ளது. இதனை நமீபியாவுக்கு அமீரகம் கொடுத்துள்ள அப்செட் என்றும் சொல்லலாம்.
ஆஸ்திரேலியாவின் ஜிலாங் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற அமீரகம் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் டாப் 5 பேட்ஸ்மேன்களில் 4 பேர் டீசன்டாக ஆடி இருந்தனர். தொடக்க ஆட்டக்காரர் முகமது வாசிம், 50 ரன்கள் எடுத்தார். கேப்டன் ரிஸ்வான் 29 பந்துகளில் 43 ரன்கள் விளாசினார். விக்கெட் கீப்பர் அரவிந்த் 21 ரன்களும், ஹமீது 25 ரன்களும் எடுத்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/ey5C9hS