
மும்பை: நடப்பு உலகக் கோப்பை தொடரில் அரையிறுதி விளையாடப் போகும் நான்கு அணிகள் எது என்பதை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் கணித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா உட்பட மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ளன. முதல் சுற்று, சூப்பர் 12, அரையிறுதி மற்றும் இறுதி என மொத்தம் 45 போட்டிகள் இதில் அடங்கும். இந்தத் தொடரில் டாப் 4 இடங்களை பிடிக்கப் போகும் அணிகள் எவை என்பது குறித்து பலமான எதிர்பார்ப்பு உள்ளது. ஒவ்வொரு அணியும் ஒவ்வொரு வகையில் பலமாக உள்ளது. சில அணிகளில் முக்கிய வீரர்கள் காயம் காரணமாக தொடரில் பங்கேற்கவில்லை. இந்நிலையில், இந்த தொடரில் அரையிறுதி வரை முன்னேற உள்ள நான்கு அணிகள் எது என்பதை சச்சின் கணித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/Dfsn20q