அழுத்தமாக உணர்ந்தால் ஐபிஎல் விளையாட வேண்டாம்: கபில் தேவ்

ஆட்டத்தில் அதிக அளவு அழுத்தம் இருப்பதாக உணரும் வீரர்கள் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாட வேண்டாம் என வீரர்களிடம் தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ். மாடர்ன் டே கிரிக்கெட்டில் பங்கேற்று விளையாடும் வீரர்களுக்கு நிறைய அழுத்தம் இருக்கிறதா என அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு இந்த பதிலை சொல்லியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடுவதால் அழுத்தம் இருப்பதாக ஒரு சில புகார் உள்ளது. அதனை சிலர் வெளிப்படையாக தொலைக்காட்சியில் சொல்லி நான் பார்த்துள்ளேன். அதனால் அவர்களுக்கு இதனை சொல்லிக் கொள்கிறேன் என தனியார் நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற அவர் சொல்லியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/fxR0jT8