'ஈகோவை ஒழித்தால் உச்சத்தை அடையலாம்' - மில்கா சிங் சிறப்புப் பகிர்வு

‘உச்சத்தை அடைவதற்கு நீ விரும்பினால், உன்னுடைய ஒட்டுமொத்த இருப்பையும் அழித்துவிடு. ஏனெனில், விதை ஒன்று முளைவிட்டு மலராவதற்கு மண்ணோடு மண்ணாக ஆகிவிடுகிறது.’ மில்கா சிங்

காமன்வெல்த் மற்றும் ஆசிய போட்டிகள் என இரண்டிலும் 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற தடகள வீரர். 1960 ஒலிம்பிக்கில் 400 மீட்டர் ஓட்டத்தை வெறும் 45.73 நொடிகளில் கடந்து தேசிய சாதனையை படைத்தவர். அது சுமார் 40 ஆண்டு காலம் வரை தகர்க்கப்படாத சாதனையாக இருந்தது. இந்திய நாட்டுக்குள் அகதியாக வந்தவர் பின்னாளில் தேசத்தின் தடகள சாம்பியனானார். அவர் தான் மில்கா சிங். பறக்கும் சீக்கியர் எனப் போற்றப்படுகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/pzdAKQ5