
கால்பந்து உலகில் அசாத்திய சாதனைகள் பல படைத்து எண்ணற்ற ரசிகர்களின் மனதில் ஆதர்ச நாயகனாக குடி கொண்டிருப்பவர் அர்ஜெண்டினாவின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி. 35 வயதான மெஸ்ஸி வரும் நவம்பர் மாதம் கத்தாரில் நடைபெற உள்ளஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரேதான் பங்கேற்கும் கடைசி உலகக் கோப்பை தொடர் என அறிவித்துள்ளார். இது கால்பந்து ரசிகர்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
கால்பந்து அரங்கில் லயோனல் மெஸ்ஸி நிகழ்த்திய அற்புதங்களும், வென்று குவித்துள்ள விருதுகளுமே அவரது திறனை பறை சாற்றும்.1995-ல் இளம் பாலகனாக தனது கால்பந்து வாழ்க்கையை தொடங்கினார் மெஸ்ஸி. குழந்தை பருவத்திலேயே மெஸ்ஸியிடம் அசாத்திய திறமைகள் வெளிப்பட்டதால் அவரது தந்தையே அவருக்கு முதலில் பயிற்சி கொடுத்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/f0SF2mv