“ஆருயிர் மகனை கொஞ்சம் மிஸ் செய்கிறேன்” - ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சிப் பதிவு

பெர்த்: “எனது ஆருயிர் மகனை கொஞ்சம் மிஸ் செய்கிறேன். வாழ்நாளில் எனக்கு கிடைத்த சிறந்தப் பரிசு அவன்” என ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதுவும் தனது பிறந்த நாளன்று இந்தப் பதிவை அவர் பதிவு செய்துள்ளார். தற்போது இந்திய அணியுடன் ஆஸ்திரேலியாவில் உள்ளார் அவர்.

இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா இதுவரை 11 டெஸ்ட், 66 ஒருநாள் மற்றும் 73 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். அதன் மூலம் 2907 ரன்கள் மற்றும் 134 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். இந்திய அணியின் துருப்புச் சீட்டு அவர் என சொல்லப்படுகிறார். அணிக்கு தேவைப்படும் நேரத்தில் வேகப்பந்து வீச்சாளராகவும், பேட்ஸ்மேனாகவும் கைகொடுத்து உதவுவார். ஆட்டத்தை வென்று கொடுக்கும் மேட்ச் வின்னர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/tyvFVJu