
டி 20 கிரிக்கெட் போட்டி பேட்ஸ்மேன் களுக்கான ஆட்டமாகவே கருதப்பட்டு வருகிறது. ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாகபவுண்டரிகள், சிக்ஸர்கள் விளாசும் வகையில்பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளங்கள் வடிவமைக்கப்படுகின்றன என்ற கருத்தும் உள்ளது. பெரும்பாலான அணிகள் ஆட்டத்தின் பிற்பகுதியில் ஆக்ரோஷமாக விளையாடும் அணுகுமுறையை கடைபிடிக்கின்றன. இதில் இங்கிலாந்து அணி மட்டுமே விதிவிலக்கு. தொடக்கத்திலேயே மட்டையை சுழற்றும் அந்த அணி விக்கெட்கள் சரிந்தாலும் கூட அதிரடி பாணியை மாற்றுவது இல்லை. இந்த வகையில் தற்போது பயிற்சியாளர்கள் மற்றும் கேப்டன்கள் நங்கூரமிட்டு விளையாடுவதை விட தாக்குதல் ஆட்டம் தொடுப்பதே சிறந்தது என்ற கண்ணோட்டத்தில் டி 20 கிரிக்கெட்டை அணுகத் தொடங்கிவிட்டனர்.
இந்த சூழ்நிலையில்தான் ஆஸ்திரேலிய டி 20 உலகக் கோப்பையானது மட்டை வீச்சுக்கும், பந்து வீச்சுக்கும் சமவாய்ப்பு அளிக்கும் தொடராக அமையும் என கிரிக்கெட் வல்லுநர்கள் கருதுகின்றனர். இதற்கு காரணம் வேகப்பந்து வீச்சுக்கு கைகொடுக்கும் ஆடுகளங்கள் மற்றும் பெரிய அளவிலான மைதானங்கள். பந்தில் வேகம் மற்றும்பவுன்ஸ் இருக்கும் என்பதால் வேகப் பந்து வீச்சாளர்கள் சாதிக்க வாய்ப்பு உள்ளது. அதேசமயம் எல்லைக்கோடு தூரம் அதிகம் என்பதால் சுழற்பந்து வீச்சாளர்களும் புகுந்து விளையாடலாம். போட்டி நடைபெறும் பிரிஸ்பன், மெல்பர்ன், அடிலெய்டு, பெர்த் ஆகிய ஆடுகளங்கள் வேகங்களுக்கு சாதகமானது. அதேவேளையில் ஹோபர்ட்சுழற்பந்து வீச்சாளர்களுக்கு கைகொடுக்கும். அடிலெய்டு தவிர மற்ற மைதானங்களில் இந்த ஆண்டில்முதல் பேட்டிங்கின் போது எடுக்கப்பட்ட சராசரி ஸ்கோர் 170-க்கும் குறைவாகவே உள்ளது. எனவேஇந்த உலகக் கோப்பையில் பேட்டிங் உத்திகள்அணிகளை எந்தளவுக்கு அழைத்துச் செல்லும் என்பதை பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/q5Qm9tT