
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, பள்ளி படித்தபோது தான் ஒரு சராசரியாக படிக்கும் மாணவன் என்றும், தான் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறுவது கடினம் என தனது தந்தை எண்ணியதாகவும் தெரிவித்துள்ளார். ஓசூரில் நடைபெற்ற சூப்பர் கிங்ஸ் அகாடமி தொடக்க விழாவில் பங்கேற்றபோது அவர் இதனை பகிர்ந்திருந்தார்.
இந்த நிகழ்வில் நடைபெற்ற கலந்துரையாடலில் அவரிடம் பள்ளி வாழ்க்கை குறித்து கேட்கப்பட்டது. அப்போதுதான் இந்த நினைவை பகிர்ந்துள்ளார் அவர். ஐசிசி நடத்தும் டி20 உலகக் கோப்பை, 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபியை வென்ற சர்வதேச கிரிக்கெட் அணியின் கேப்டனாக தோனி உள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/jedCoVO