
மொஹாலி: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது கே.எல். ராகுல் தொடக்க வீரராக களமிறங்குவார் என்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறினார்.
டி20 உலகக் கோப்பை போட்டிக்கு முன்னதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் முதலாவது ஆட்டம், பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் செப்டம்பர் 20-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக இந்திய கிரிக்கெட் அணி மொஹாலிக்கு வந்து பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. டி20 உலகக் கோப்பை போட்டி தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது: ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை போட்டி இந்தியாவுக்கு சவாலானதுதான். இந்தப் போட்டிக்காக நாங்கள் சிறப்பாகத் தயாராகி வருகிறோம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/Um1EAo7