
எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அந்த அணியை தேர்வு செய்த தேர்வுக்குழுவின் தலைவரை காட்டமாக விமர்சித்துள்ளார், முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமிர். அதன் காரணமாக அவர் சமூக வலைதங்களில் ட்ரோல் செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக 36 டெஸ்ட், 61 ஒருநாள் மற்றும் 50 டி20 போட்டிகளில் விளையாடிய இடது கை வேகப்பந்து வீச்சாளர் தான் ஆமிர். மொத்தம் 259 சர்வதேச விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். சூதாட்ட புகாரில் சிக்கி 5 ஆண்டுகள் தடையை எதிர்கொண்டவர். 30 வயதான அவர் கடந்த 2020 வாக்கில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/VCbwWkA