T20 WC | வியூகம் வகுத்து வெற்றிக்கு வித்திடுவாரா ‘ரங்கன் வாத்தியார்’ ராகுல் திராவிட்?

2021 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணி முதல் சுற்றோடு வெளியேறி இருந்த நெருக்கடியான தருணத்தில் அணியின் முழுநேர தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றார் ராகுல் திராவிட். அவர் அணியின் பயிற்சியாளராக வேண்டும் என ரசிகர்கள் குரல் கொடுக்கும் அளவுக்கு ஏகோபித்த ஆதரவை அப்போது பெற்றிருந்தார். அதற்கு காரணம், அவரது டிராக் ரெக்கார்டுகள்தான். வீரர், பயிற்சியாளர், தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குநர் என பயணம் செய்த அனுபவம் கொண்டவர்.

அதனால், இந்திய அணிக்கு அவர் புதுப்பாய்ச்சல் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. அதே நேரத்தில் அணியில் கேப்டன்சி மாற்றங்களும் நடந்தது. ரோகித் சர்மா மூன்று ஃபார்மெட்டுக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையின் கீழ் இந்திய அணி இரு நாடுகள் இடையேயான (Bilateral Series) தொடர்களில் வெற்றி பெற்று வந்தது. குறிப்பாக டி20 போட்டிகளில் தொடர் வெற்றியை பெற்று வந்தது இந்தியா.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/fiuUAe1