
எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான 15 வீரர்கள் அடங்கிய இந்திய அணியில் ஒருவராக இடம்பிடித்துள்ளார் தினேஷ் கார்த்திக். இவரை ரசிகர்கள் அன்போடு டிகே என அழைப்பது வழக்கம். அண்மையில் இந்த அறிவிப்பு வெளியானபோது ‘கனவு பலித்ததே’ என தனது எண்ண ஓட்டத்தை ட்வீட் மூலம் வெளிப்படுத்தி இருந்தார். இத்தகைய சூழலில் விடாமுயற்சியின் பலனால் அவருக்கு கிட்டியுள்ள வாய்ப்பும், அதற்கு முன்னால் மலை போல நிற்கும் சவால்கள் குறித்தும் பார்ப்போம்.
புராணக் கதைகளில் வர்ணனை செய்யபப்டும் ஃபீனிக்ஸ் பறவையின் குணத்தை தன்னகத்தே தாங்கி நிற்பவர் டிகே. அவரது கிரிக்கெட் கரியரின் கிராப்பை எடுத்துப் பார்த்தால் அது இந்திய அணிக்குள் வருவதும், போவதுமாக இருந்து கொண்டே இருக்கும். கிட்டத்தட்ட இந்தியா மீது மனம் தளராது படையெடுத்த கஜினி முகமதுவின் முயற்சியை போன்றது அது. அதற்கு பல்வேறு தருணங்களை உதாரணமாக சொல்லலாம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/HYCFaGD