களத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் உணர்ச்சி வெளிப்பாடு ஏன் ஆக்ரோஷமாக இருக்கிறது என்பதற்கு இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் விளக்கம் கொடுத்துள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் ரோகித்தின் முகபாவனை வைரலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அண்மைய நாட்களாக களத்தில் தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்திய வண்ணம் உள்ளார். அது அண்மையில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை தொடரில் அப்பட்டமாக வெளிப்பட்டு இருந்தது. இந்தச் சூழலில் அது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரிலும் தொடர்ந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/SazjN35