மன்கட் அவுட் சர்ச்சை: இந்திய வீராங்கனை தீப்தி சர்மா தகவலுக்கு சார்லி டீன் மறுப்பு

மன்கட் அவுட் சர்ச்சை விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா தெரிவித்த கருத்தை திட்டவட்டமாக மறுத்துள்ளார் இங்கிலாந்து வீராங்கனை சார்லி டீன். இரு அணிகளுக்கும் இடையில் அண்மையில் நடந்து முடிந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 3-0 என வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த சனிக்கிழமை இங்கிலாந்தின் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடின. இதில் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து வீராங்கனை சார்லி டீனை ‘மன்கட்’ முறையில் நான்-ஸ்ட்ரைக்கில் எண்டில் பந்து வீசுவதற்கு முன்னர் அவுட் செய்திருந்தார் தீப்தி. அது சர்ச்சையானது. கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் அது குறித்து தங்களது கருத்துகளை சொல்லி வந்த நிலையில் இந்த சர்ச்சையில் தொடர்புடைய தீப்தி சர்மா தனது கருத்தை தெரிவித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/8HSaMtY