சூர்யகுமார் யாதவ் கரியருக்கு கேகேஆர் அணியில்தான் திருப்புமுனை கிடைத்தது: ரிக்கி பாண்டிங்

இந்திய கிரிக்கெட் அணியின் சூர்யகுமார் யாதவின் கரியரில் கேகேஆர் அணியில் விளையாடியபோது தான் திருப்புமுனை ஏற்பட்டது என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். தற்போது சூர்யகுமார் யாதவ் அபாரமான ஃபார்மில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

32 வயதான சூர்யகுமார் யாதவ் இந்திய அணிக்காக 13 ஒருநாள் மற்றும் 31 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். அதன் மூலம் 1266 ரன்கள் எடுத்துள்ளார் அவர். இதில் டி20 கிரிக்கெட்டில் மட்டும் 926 ரன்கள் எடுத்துள்ளார். நடப்பு ஆண்டில் மட்டும் டி20 கிரிக்கெட்டில் 682 ரன்கள் குவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இரண்டாம் இடத்தில உள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/pQqYHGR