மும்பை: இங்கிலாந்து அணிக்கு எதிராக வரும் சனிக்கிழமை இந்திய அணி விளையாட உள்ள மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி தான் இந்திய வீராங்கனை ஜூலான் கோஸ்வாமியின் கடைசி சர்வதேச கிரிக்கெட் போட்டி என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
39 வயதான ஜூலான் கோஸ்வாமி இந்திய அணிக்காக 12 டெஸ்ட், 68 டி20 மற்றும் 203 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். கடந்த 2002 வாக்கில் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் களத்தில் அறிமுகமானவர். வலது கை மித வேகப்பந்து வீச்சாளர். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்து வீச்சாளர் என அவர் அறியப்படுகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/r5AypvW