“நான் களத்தில் கோபப்படுவது இல்லை. ஏனெனில்...” - தோனி விளக்கம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை ‘கூல் கேப்டன்’ என ரசிகர்கள் அன்போடு அழைப்பது வழக்கம். களத்தில் அவர் அதிகம் தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் இருப்பதே அதற்குக் காரணம். இந்நிலையில், அதற்கான காரணத்தை விவரித்துள்ளார் தோனி.

பாட்ஷா படத்தில் மாணிக் பாட்ஷா-வாக வரும் நடிகர் ரஜினிகாந்த் அந்தப் பெயருக்கு ஏற்ற வகையில் இருவேறு கேரக்டர்களில் வாழ்ந்திருப்பார். ஒன்று சாந்த சொரூபமான மாணிக்கம். மற்றொன்று பம்பாய் நகரில் டானாக வலம் வரும் பாட்ஷா கேரக்டர். இதில் களத்தில் தோனியின் செயல்பாடு மணிக்கத்தை போல இருக்கும். ‘உங்களுக்கு கோபமே வராதா?’ என ரசிகர்கள் கேட்கும் அளவுக்கு அது இருக்கும். இப்போது அதற்கு தனது ஸ்டைலில் பதில் கொடுத்துள்ளார் தோனி. ஒரு நிகழ்வில் கலந்துகொண்டபோது இதனை பகிர்ந்து கொண்டுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/jU6TcvL