
தனது அதிரடி ஆட்ட அணுகுமுறைக்கு காரணம், சென்னை சூப்பர் கிங்ஸ் தான் என்று இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர் புஜாரா தெரிவித்துள்ளார். நடப்பு ராயல் லண்டன் ஒருநாள் தொடரில் மொத்தம் 624 ரன்கள் குவித்து அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்களின் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்துள்ளார் அவர். சசெக்ஸ் அணிக்காக இந்த தொடரில் அவர் விளையாடி இருந்தார். இங்கிலாந்தில் உள்ள முதல்-தர கவுன்டி கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் நடைபெறும் தொடர் இது. இந்த தொடரில் 3 சதம் மற்றும் இரண்டு அரை சதம் பதிவு செய்திருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 111.62.
இந்திய அணியின் சீனியர் வீரர்களில் ஒருவர் புஜாரா. டெஸ்ட் அணியில் ரெகுலர் பேட்ஸ்மேனாக விளையாடி வருகிறார். அதோடு இங்கிலாந்தில் கவுன்டி கிரிக்கெட் தொடரிலும் விளையாடி வருகிறார். இவரது பேட்டிங் மிகவும் நேர்த்தியாக இருக்கும். களத்தில் சாலிடாக நிலைத்து நின்று, நிதானமாக ஆடும் பேட்ஸ்மேனாக இவர் அறியப்படுகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/BR80NXQ