
பல கிரிக்கெட் ஆளுமைகள் ஆட்கொண்டுள்ள இரண்டு புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர். அதோடு அதில் எத்தனை சர்வதேச ரன்கள் மற்றும் விக்கெட்டுகள் உள்ளன என்பதை சொல்ல முடியுமா? எனவும் புதிர் போட்டுள்ளார்.
இந்தியாவில் தற்போது சாலை பாதுகாப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை, இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, வங்கதேசம், ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து என எட்டு நாடுகளை சேர்ந்த முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். தொடரின் முதல் சுற்று ரவுண்ட் ராபின் முறையில் நடைபெற்று வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/Jcft2gm