
துபாய்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இழந்த தனது ஃபார்மை மெதுவாக மீட்டு வருகிறார். அடுத்தடுத்த டி20 போட்டிகளில் 30 ரன்களுக்கு மேல் ஸ்கோர் செய்துள்ளார். இந்நிலையில், அது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கவுதம் கம்பீர் மற்றும் இன்சமாம்-உல்-ஹாக் கூறிய கருத்துகளைப் பார்ப்போம்.
சர்வதேச கிரிக்கெட் களத்தின் ரன் மெஷின் என அறியப்படுகிறார் விராட் கோலி. மூன்று ஃபார்மேட்டிலும் இவரது ரன் வேட்டை தொடர்ந்து வந்தது. இருந்தும் கடந்த சில ஆண்டுகளாக இவரது ஆட்டம் மங்கியது. அவர் எப்போது சதம் பதிவு செய்வார் என்ற கேள்வி எழுந்தது. அண்மையில் அவரது ஆட்டம் குறித்து நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் கருத்துகள் வந்தன. இந்தச் சூழலில்தான் நடப்பு ஆசிய கோப்பை தொடரில் அவர் அடுத்தடுத்த போட்டிகளில் 35 மற்றும் 59* ரன்களை சேர்த்துள்ளார். இதில் முதல் போட்டி பாகிஸ்தானுக்கு எதிராக அவர் விளையாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/d1HhEm4