
துபாய்: நடப்பு ஆசிய கோப்பை தொடரில் இலங்கை கிரிக்கெட் அணி, வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் ஃபீல்டிங் செய்தபோது அந்த அணி வீரர்களுக்கு '2D, D5' ரகசிய குறியீடு அடங்கிய கோடுகள் டிரெஸ்ஸிங் ரூமில் இருந்து அனுப்பப்பட்டது. அந்த குறியீடு அடங்கிய படங்கள் இப்போது வைரலாகி உள்ளன.
நடப்பு ஆசிய கோப்பையின் முதல் சுற்றில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் நேற்று பலப்பரீட்சை செய்தன. இரு அணிக்கும் இது வாழ்வா, சாவா என்ற நிலையில் நடைபெற்ற போட்டி. இதில் வெற்றி பெறும் அணி அடுத்தச் சுற்றுக்கு முன்னேறும். துபாயில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்கதேச அணியின் பவுலர்கள் இறுதி ஓவர்களின்போது எக்ஸ்ட்ரா ரன் கொடுத்ததே வீழ்ச்சிக்கு காரணம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/rueUGSv