
சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர்களால் என்றென்றும் மறக்க முடியாத அற்புத தருணங்களில் ஒன்று தான் கடந்த 2007 டி20 உலகக் கோப்பையில் ஒரே ஓவரில் யுவராஜ் சிங் விளாசிய அந்த ஆறு சிக்ஸர்கள். இன்றளவும் அது சாதனையாக பார்க்கப்படுகிறது. முதல் டி20 உலகக் கோப்பையில் இந்த சாதனை படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கால சக்கரத்தை அப்படியே பின்னோக்கி தள்ளி 2007, செப்டம்பர் 19 டர்பன் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை குரூப் சுற்றுப் போட்டியை கொஞ்சம் நினைவு கொள்வோம். அந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட் செய்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/c5TjKos