
துபாய்: அக்டோபர் 1-ம் தேதி முதல் புதிய விதிகளை கிரிக்கெட் களத்தில் அமல்படுத்த உள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி). கிரிக்கெட் பந்தை பாலிஷ் செய்ய உமிழ்நீர் பயன்படுத்துவதற்கு தடை உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் இதன்மூலம் நடைமுறைக்கு வரவுள்ளன. அந்தப் புதிய விதிகள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.
கிரிக்கெட் விளையாட்டில் முன்பெல்லாம் பை-ரன்னர் என்றொரு ஆப்ஷன் இருக்கும். அதன் மூலம் களத்தில் பேட் செய்யும் வீரர்கள் தங்களுக்கு பதிலாக மாற்று வீரரை அழைத்து ரன் ஓட சொல்லி பணிக்கலாம். ஆனால், பேட்டிங் மட்டும் அவர்கள்தான் செய்ய வேண்டும். கால ஓட்டத்தில் அதற்கு விதிகளில் மாற்றம் கொண்டு வந்து குட்பை சொல்லப்பட்டது. இப்படியாக விதிகளை மாற்றி பழைய வழக்கத்திற்கு முழுக்கு போடுவது மற்றும் புதிய விதிகளை அமல்படுத்துவதுமாக கிரிக்கெட் கவுன்சில் இயங்கி வருகிறது. இது விளையாட்டில் சுவாரசியத்தை கூட்டுவதற்காக கொண்டு வரப்படும் முயற்சி. ஃபரீ ஹிட், ஓவருக்கு ஒரு பவுன்சர் போன்ற விதிகள் எல்லாம் அப்படி கொண்டுவரபட்டவை தான்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/Ag2YI8S