சென்னைக்கும் ‘மஞ்சள் தமிழன்’ தோனிக்கும் இடையேயான உன்னத உறவு | Chennai Day

சென்னை தினம் கொண்டாடப்பட்டு வரும் சூழலில் கிரிக்கெட் வீரரும், ஐபிஎல் ரசிகர்களால் ‘மஞ்சள் தமிழன்’ என்று அழைக்கப்படுபவருமான மகேந்திர சிங் தோனிக்கும், சென்னைக்கும் இடையே உள்ள உன்னதமான உறவு குறித்து பார்ப்போம். சென்னையை தனது இரண்டாவது தாய்வீடு என தோனியே சொல்லியுள்ளார். அவரை ரசிகர்கள் அன்போடு ‘தல’ என்று அழைப்பது வழக்கம். அந்த செல்லப் பெயருக்கு அவர் பொருத்தமானவரும் கூட. ரசிகர்களுக்கும் அவருக்கும் இடையே உள்ள உணர்வுபூர்வமான பந்தத்தின் வெளிப்பாடுதான் அந்தப் பெயருக்கான காரணம்.

மகிழ்மதிக்கும் பாகுபலிக்கும் இடையே உள்ள கனக்ட்டிவிட்டியை நிஜ வாழ்க்கையில் சென்னை - தோனி பந்தத்தை விவரிப்பாகச் சொல்லலாம். அந்த அளவுக்கு இருக்கும் காம்போ இது. அவர் நிஜ வாழ்க்கையிலும், விளையாட்டு கெரியரிலும் பலருக்கு இன்ஸ்பிரேஷனாக உள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/2nS9yPp