ஐபிஎல் | கொல்கத்தா அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆனார் சந்திரகாந்த் பண்டிட்... யார் இவர்?

ஃப்ரான்சைஸ் கிரிக்கெட் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக சந்திரகாந்த் பண்டிட் நியமிக்கப்பட்டுள்ளார். அவர், எதிர்வரும் 2023 சீசன் முதல் பொறுப்பை ஏற்பார் எனத் தெரிகிறது.

ஐபிஎல் கிரிக்கெட் அரங்கில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் ஜூஹி சாவ்லா ஆகியோர் இந்த அணியின் உரிமையாளர்களாக உள்ளனர். கடந்த ஏப்ரல்-மே மாதம் நடைபெற்ற 15-வது ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணி முதல் சுற்றோடு வெளியேறி இருந்தது. அதற்கு முந்தைய சீசனில் இரண்டாம் இடம் பிடித்திருந்தது அந்த அணி.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/MxO2tpI