
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் தொடரில் ஓபன் பிரிவின் 8-வது சுற்றில் இந்திய பி அணி, பலம் வாய்ந்த அமெரிக்காவை எதிர்த்து விளையாடியது. இதில் 16 வயதான கிராண்ட் மாஸ்டர் டி.குகேஷ், உலகத் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள ஃபேபியானோ கருணாவை எதிர்கொண்டார். இதில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய குகேஷ் 45-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். குகேஷுக்கு இது 8-வது வெற்றியாக அமைந்தது.
வெற்றி குறித்து இந்திய பி அணியின் வீரர் டி.குகேஷ் கூறும்போது, “பேபியோனோ எனக்கு மிகவும் விருப்பமான வீரர். அவருக்கு எதிராக விளையாடியது பெருமையாக உள்ளது. இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சற்று மோசமாக விளையாடினேன். ஆனால் ஒரு கட்டத்தில் நிலைநிறுத்திக்கொண்டேன். அப்போது பேபியாயோனா செய்த தவறால் அங்கிருந்து வெற்றியை நோக்கி நகரத் தொடங்கினேன். இதுவரை ஆட்டத்தை மகிழ்ச்சியாக விளையாடி வருகிறேன். இன்னும் கடினமான 3 சுற்றுகள் உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/TjoC1cw