கால்பந்து உலகக் கோப்பை: 2.45 மில்லியன் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்ததாக பிஃபா அறிவிப்பு: அதிக டிமாண்ட்டான போட்டிகள் எவை?

எதிர்வரும் கால்பந்து உலகக் கோப்பை 2022 தொடருக்கான மேட்ச் டிக்கெட்டுகளில் சுமார் 2.45 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளதாக சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு (பிஃபா) தெரிவித்துள்ளது. உலக அளவில் விளையாட்டு ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற விளையாட்டு தொடர்களில் இது ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.

சரியாக 93 நாட்களில் (நவம்பர் 20) இந்த தொடர் ஆரம்பமாக உள்ளது. மொத்தம் 32 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்று விளையாடுகின்றன. 8 பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. கத்தார் நாட்டில் உள்ள 8 மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகிறது. உலகின் முன்னணி கால்பந்தாட்ட வீரர்கள் இதில் விளையாடுகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/9JtAuhy