செஸ் ஒலிம்பியாட் | முதல் தோல்வியை சந்தித்தது இந்திய ‘பி’ அணி - மகளிர் பிரிவில் 2 வெற்றி, ஒரு டிரா

சென்னை: 44-வது செஸ் ஒலிம்பியாட்போட்டியின் ஓபன் பிரிவில் இந்திய பி அணி முதல் தோல்வியைச் சந்தித்தது.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் 6-வது நாளான நேற்று ஓபன் பிரிவில் இந்திய ஏ அணி, உஸ்பெகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தை 2-2 என்ற கணக்கில் டிரா செய்தது. ஹரிகிருஷ்ணா பென்டலா, அப்துசட்டோரோவ் நோடிர்பெக்கை தோற்கடித்தார். விதித் குஜராத்தி, அர்ஜுன் எரிகைசி ஆகியோர் தங்களது ஆட்டங்களை டிரா செய்தனர். சசிகிரண், வோகிடோவ் ஷம்சிடினிடம் தோல்வியடைந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/z30In1J