IND vs ENG | 19 ரன்கள், 3 மெய்டன், 6 விக்கெட் - பும்ராவின் மிரட்டல் பவுலிங்கில் சுருண்ட இங்கிலாந்து

ஓவல்: முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியை 110 ரன்களுக்குள் சுருட்டியுள்ளது இந்திய வேகப்பந்து வீச்சு படை. பும்ரா 6 விக்கெட் வீழ்த்தி தனது கரியரில் சிறப்பான பந்துவீச்சை பதிவு செய்தார்.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதிய டெஸ்ட் தொடர் 2-2 என சமநிலையில் முடிவடைந்தது. இதன் பின்னர் நடைபெற்ற 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரை இந்திய அணி 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது. இந்நிலையில் இரு அணிகளும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் மோதுகின்றன. இதன் முதல் ஆட்டம் லண்டனில் உள்ள தி ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது.

டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அணியின் ஷிகர் தவான் நீண்ட நாட்களுக்குப் பிறகு இடம்பெற்றார். அவருடன் பிரசித் கிருஷ்ணா மற்றும் ஷமி ஆகியோரும் அணிக்கு திரும்பியிருந்தனர். அதேபோல், டி20 தொடரை இழந்த இங்கிலாந்து அணி, ஒருநாள் போட்டித் தொடரில் வலுவாக மீண்டுவர முயற்சி மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால், பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் அணிக்கு திரும்பி இருப்பதால், அந்த அணியின் பேட்டிங் வலுப்பெற்றதும் காரணமாக அமைந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/f2vmGEg