பிரசவத்திற்கு பிறகு கம்பேக் கொடுக்க விரும்பும் இந்திய கிரிக்கெட் வீராங்கனை சினேகா தீப்தி

விசாகப்பட்டினம்: தனது பிரசவத்திற்கு பிறகு கிரிக்கெட் களத்தில் மீண்டும் தான் கம்பேக் கொடுக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீராங்கனை சினேகா தீப்தி. அதில் தான் உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் 25 வயதான கிரிக்கெட் வீராங்கனை சினேகா. கடந்த 2013 வாக்கில் இந்திய அணியில் அறிமுகமானவர். சர்வதேச டி20 போட்டியில் இந்திய அணிக்காக 16 வயது 204 நாட்களில் அறிமுகமான இளம் வீராங்கனை என அறியப்படுகிறார் அவர். ஸ்மிருதி மந்தனா உடன் இணைந்து கிரிக்கெட் களத்தில் அறிமுகமானவர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/zoLNME7