ஒருநாள் போட்டியில் இந்தியா-இங்கி. இன்று மோதல்

லண்டன்: ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதிய டெஸ்ட் தொடர் 2-2 என சமநிலையில் முடிவடைந்தது. இதன் பின்னர் நடைபெற்ற 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரை இந்திய அணி 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது. இந்நிலையில் இரு அணிகளும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் மோதுகின்றன. இதன் முதல் ஆட்டம் லண்டனில் உள்ள தி ஓவல் மைதானத்தில் இன்று மாலை 5.30 மணி அளவில் நடைபெறுகிறது.

டி 20 தொடரில் இந்திய அணி மட்டை வீச்சில் தாக்குதல் ஆட்டத்தை மேற்கொண்டிருந்தது. இதே பாணியை ஒருநாள் போட்டித் தொடரிலும் இந்திய அணி தொடரக்கூடும். இங்கிலாந்து அணி கடந்த சில ஆண்டுகளாக ஒருநாள் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மிகப்பெரிய அளவிலான இலக்கை கொடுப்பதும், பெரிய இலக்காக இருந்தாலும் துணிச்சலுடன் விளையாடி வெற்றியை வசப்படுத்துவதும் அந்த அணி வாடிக்கையாக கொண்டுள்ளது. மோர்கன் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் ஜாஸ் பட்லர் தலைமையில் இங்கிலாந்து அணி களமிறங்குகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/Ap2EYbj