“கோலி அணியில் நான் விளையாடி இருந்தால் மேலும் சில உலகக் கோப்பைகள் வசமாகியிருக்கும்” - ஸ்ரீசாந்த்

எர்ணாகுளம்: கோலியின் அணியில் தான் இடம்பெற்று விளையாடி இருந்தால் இந்திய கிரிக்கெட் அணி மேலும் சில உலகக் கோப்பைகளை வென்றிருக்குக்கும் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணிக்காக 27 டெஸ்ட், 53 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடியவர் ஸ்ரீசாந்த். அதன் மூலம் மொத்தம் 169 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். முக்கியமாக 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியில் ஸ்ரீசாந்த் விளையாடி உள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/KtSVj7N