
லண்டன்: நடப்பு விம்பிள்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. முதல் முறையாக கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா விம்பிள்டனில் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவைச் சேர்ந்தவர் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. 35 வயதான அவர் கடந்த 2003 முதல் டென்னிஸ் கோர்ட்டில் ராக்கெட் ஏந்தி விளையாடி வருகிறார். கடந்த 2008 வரையில் ஒற்றையர் பிரிவில் மிகவும் பிசியாக கிராண்ட் ஸ்லாம் உட்பட பல்வேறு சர்வதேச டென்னிஸ் தொடர்களில் விளையாடி வந்தார் சானியா. அதன் பிறகு தனது ரூட்டை மாற்றிக் கொண்டு இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் போட்டிகளில் அவர் விளையாடி வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/l7SU80h