கொல்கத்தா: ரோகித் சர்மாவுக்கு பிறகு இந்திய அணியின் வருங்கால கேப்டனாக ரிஷப் பந்த் வரலாம் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் அருண் லால் தெரிவித்துள்ளார். இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை பந்த் வெளிப்படுத்தி வரும் நிலையில், இதனை அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று பார்மெட்டிலும் தவிர்க்க முடியாத வீரராக உருவாகி உள்ளார். நடப்பு ஆண்டில் மட்டும் சர்வதேச கிரிக்கெட் களத்தில் மொத்தம் 988 ரன்கள் சேர்த்துள்ளார் பந்த். இதில் மூன்று சதம் மற்றும் மூன்று அரை சதம் அடங்கும். இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா வெல்ல கடைசி போட்டியில் மேட்ச் வின்னராக ஜொலித்தார் பந்த்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/hmf0N7u