“சர்வதேச கிரிக்கெட்டில் ஐபிஎல் அணி உரிமையாளர்களின் ஆதிக்கம் ஆபத்தானது” - கில்கிறிஸ்ட்

பெல்லிங்கன்: சர்வதேச கிரிக்கெட்டில் ஐபிஎல் அணி உரிமையாளர்களின் ஆதிக்கம் கொஞ்சம் ஆபத்தானதுதான் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான்களில் ஒருவரான ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார். எதிர்வரும் பிக் பேஷ் லீக் சீசனை ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் தவிர்த்து விட்டு, அமீரகத்தில் நடைபெறும் மற்றொரு டி20 லீக் தொடரில் விளையாடுவார் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், கில்கிறிஸ்ட் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் இது நடந்தால் கிரிக்கெட் ஆஸ்திரேலியா கமர்ஷியல் ரீதியாக தற்கொலை செய்து கொண்டதற்கு சமம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மும்பை, கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் யூஏஇ டி20 லீக் தொடரில் முதலீடு செய்துள்ளன. இதில்தான் வார்னர் பங்கேற்க உள்ளதாக தெரிகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/Q0pfToM