இந்திய அணியில் கோலி இடத்துக்கு பிரச்சினையா? - கேப்டன் ரோஹித் சர்மா விளக்கம்

லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று முன்தினம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 246 ரன்கள் இலக்கை விரட்டிய இந்திய அணி 38.5 ஓவர்களில் 146 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 29, ரவீந்திர ஜடேஜா 29, சூர்யகுமார் யாதவ் 27, மொகமது ஷமி 23, விராட் கோலி 16 ரன்கள் சேர்த்தனர்.

ரோஹித் சர்மா, ரிஷப் பந்த் ரன் ஏதும் எடுக்காமலும் ஷிகர் தவண் 9 ரன்களிலும் நடையை கட்டினர். இங்கிலாந்து அணி சார்பில் ரீஸ் டாப்லே 9.5 ஓவர்களை வீசி 2 மெய்டன்களுடன் 6 விக்கெட்களை வேட்டையாடினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/nKHedzu