4,6,4,4,4,6,1... ஒரு ஓவரில் அதிகபட்ச ரன்கள் விளாசி லாராவின் உலக சாதனையை முறியடித்த பும்ரா!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கேப்டனாக களமிறங்கிய பும்ரா, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் (29 ரன்கள்) விளாசிய வீரர் என்ற புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.

கடந்த ஆண்டு இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. அதில் முதல் 4 போட்டிகள் முடிவில், 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகித்தது. பின்னர், கொரோனா தொற்று பரவல் காரணமாக 5-வது டெஸ்ட் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. நேற்று பர்மிங்காமில் தொடங்கிய இந்தப் போட்டியில் இந்திய அணியின் புதிய கேப்டனாக, ரோஹித் சர்மாவுக்கு பதிலாக வேகப் பந்துவீச்சாளர் பும்ரா களமிறங்கினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/WQZ6C3H