“இப்போது பலரும் ஓய்வெடுப்பது போல் அல்லாமல் 13 ஆண்டுகள் தொடர்ச்சியாக விளையாடினேன்” - கங்குலி ஷேரிங்

கொல்கத்தா: "13 ஆண்டுகள் தொடர்ச்சியாக விளையாடினேன். இப்போது நிறைய வீரர்கள் ஓய்வெடுப்பது போல் நான் ஓய்வு எடுக்கவில்லை" என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியை மேட்ச் ஃபிக்சிங் சர்ச்சை ஆட்கொண்டிருந்த நிலையில், அணியின் கேப்டனாக பொறுப்பேற்றவர் கங்குலி. இந்திய அணியின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவர். அவரது தலைமையிலான அணி 2003-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டி வரை முன்னேறி இருந்தது. பல திறமையான வீரர்கள் அவரது தலைமையின் கீழ் அறிமுகமாகி விளையாடி இருந்தனர். இந்திய அணி இப்போது அச்சமின்றி விளையாடி வரும் கிரிக்கெட்டுக்கு வித்திட்டவர் அவர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/VzlsxEZ