IPL 2022 | காயம் காரணமாக நடப்பு சீசனில் இருந்து விலகிய சிஎஸ்கே வீரர் ஜடேஜா

மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனில் எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா விலகியுள்ளார். காயம் காரணமாக அவர் விலகியுள்ளதாக சிஎஸ்கே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

33 வயதான ஜடேஜா கடந்த 2012 முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் களத்தில் விளையாடி வருகிறார். இடையில் 2016 மற்றும் 2017 சீசன்களில் குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடி இருந்தார். 2008 மற்றும் 2009 சீசன்களில் ராஜஸ்தான் அணிக்காக அவர் விளையாடினார். 2011-இல் கொச்சி அணிக்காக விளையாடினார். ஆல்-ரவுண்டரான அவர் மொத்தம் 210 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ளார். 2502 ரன்களும், 132 விக்கெட்டுகளும், 88 கேட்சுகளும் பிடித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/9nGJMZx