IPL 2022 | காயத்தினால் விலகிய ரஹானே; பிரியாவிடை கொடுத்த கொல்கத்தா

மும்பை: காயம் காரணமாக கொல்கத்தா வீரர் ரஹானே நடப்பு ஐபிஎல் சீசனில் எஞ்சியுள்ள போட்டிகளில் விளையாடாமல் விலகி உள்ளார். அவருக்கு அந்த அணி பிரியாவிடை கொடுத்துள்ளது.

பிப்ரவரியில் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் ரஹானேவை ரூ.1 கோடி வாங்கி இருந்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. இந்திய அணியின் சீனியர் வீரரை அடிப்படை தொகைக்கு அந்த அணி வாங்கி இருந்தது. நடப்பு சீசனில் அவர் மொத்தம் 7 போட்டிகளில் கொல்கத்தாவுக்காக விளையாடினார். அதன் மூலம் 133 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். இந்நிலையில், காயம் காரணமாக அவர் நடப்பு சீசனில் இருந்து விலகியுள்ளார். இதனை அந்த அணி அறிவித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/6F5tYEs