
மும்பை: "நான் கிரிக்கெட் விளையாட காரணமே அப்பா தான்" என தெரிவித்துள்ளார் இளம் வீரர் குமார் கார்த்திகேயா சிங். இவர் நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார்.
ஐபிஎல் களத்தில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி மும்பை இந்தியன்ஸ். இருந்தாலும் இந்த சீசன் மும்பைக்கு சிறப்பானதாக அமையவில்லை. தொடர் தோல்விகளால் துவண்டு போயுள்ளது அந்த அணி. இந்நிலையில், காயம்பட்ட வீரருக்கு மாற்றாக அண்மையில் அணியில் இணைந்தவர் தான் 24 வயதான இடது கை சுழற்பந்து வீச்சாளர் குமார் கார்த்திகேயா சிங். இதுவரை நடப்பு சீசனில் மூன்று ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ளார் அவர். அதன் மூலம் மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/5wIifdC