ஸ்டாயினிஸ் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதால் வெற்றி வசப்பட்டது - லக்னோ கேப்டன் கே.எல்.ராகுல் கருத்து

மும்பை: ஐபிஎல் டி20 தொடரில் நேற்று முன்தினம் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 18 புள்ளிகளுடன் லீக் சுற்றை நிறைவு செய்து பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்த ஆட்டத்தில் 211 ரன்கள் இலக்கை துரத்திய கொல்கத்தா அணிக்கு மார்கஸ் ஸ்டாயினிஸ் வீசிய கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவையாக இருந்தது. முதல் 4 பந்துகளில் 18 ரன்களை விளாசிய ரிங்கு சிங் 5-வது பந்தில் எவின் லீவிஸின் அற்புதமான கேட்ச்சால் ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் உமேஷ் யாதவ் போல்டாக லக்னோ அணி வீரர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் திளைத்தனர். போட்டி முடிவடைந்ததும் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் கூறியதாவது:
இந்த மாதிரியான போட்டிகளுக்காக இன்னும் கூடுதல் ஊதியம் தரவேண்டும். இதுபோன்ற ஆட்டங்களை இந்த சீசனில் இழந்தோம். கடைசி பந்து வரை சென்ற ஆட்டங்கள் குறைவுதான். சில போட்டிகள் கடைசி ஓவர் வரை சென்றுள்ளது. வெற்றி அணியாக இருந்ததில் மகிழ்ச்சி. எளிதாக தோல்வியடைந்திருப்போம். அது நிகழ்ந்திருந்தால் மோசமாக விளையாடியதால் தோற்றோம் என்று நினைத்து வீட்டுக்கு திரும்பியிருப்போம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/nrTYZBz