
மும்பை: தங்கள் அணியின் முன்னாள் வீரர்கள் கிறிஸ் கெயில் மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் என இருவருக்கும் 'ஹால் ஆஃப் ஃபேம்' அங்கீகாரம் கொடுத்து கவுரவித்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.
ஐபிஎல் களத்தில் 15 சீசன்களாக துடிப்பாக இயங்கி வருகிறது ஆர்சிபி. சில சீசன்களில் கோப்பையை வெல்லும் வாய்ப்புக்கு மிக அருகே சென்று அதை மிஸ் செய்துள்ளது. இருந்தாலும் அந்த அணியின் வீரர்களும், நிர்வாகமும், ரசிகர்களும் கோப்பை வெல்லும் கனவையும், அதற்கான துடிப்பை துளியளவும் குறைக்கவில்லை. நடப்பு சீசனில் புதிய கேப்டன் டூப்ளசி தலைமையில் அசத்தி வருகிறது ஆர்சிபி.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/2WTKe4B