
புது டெல்லி: சர்வதேச கிரிக்கெட்டில் தோனி விளையாடிய கடைசி போட்டி வரை அவருக்கு அணி நிர்வாகத்தின் உறுதுணை இருந்ததாக தெரிவித்துள்ளார் யுவராஜ் சிங். அதே நேரத்தில் தங்களுக்கு அத்தகைய உறுதுணை கிடைக்கவில்லை எனவும் அவர் ஆதங்கப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் 2000 முதல் 2017 வரை சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியவர். 304 ஒருநாள் போட்டிகள், 58 டி20 போட்டிகள் மற்றும் 40 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடியுள்ளார் யுவராஜ். 2011 உலகக் கோப்பையை (50 ஓவர்) இந்தியா வெல்ல முக்கியக் காரணமாக அமைந்தவர். அதிரடி பேட்ஸ்மேன், துடிப்பான ஃபீல்டர், பந்து வீசும் திறனும் படைத்தவர் அவர். இந்நிலையில், தோனிக்கு கிடைத்தது தங்களுக்கு கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/xv7K3mf