IPL 2022 | ’மகன் ஆட்டத்தை சலூன் கடையில் ரசித்த தந்தை’ - கடைசி ஓவரில் அற்புதமாக பந்துவீசிய குல்தீப் சென் யார்?

மும்பை: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் அற்புதமாக பந்துவீசி ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு உதவியிருந்தார் இளம் பவுலர் குல்தீப் சென். யார் இவர்? - சற்றே விரிவாகப் பார்ப்போம்.
நடப்பு ஐபிஎல் சீசனின் 20-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி முதலில் பேட் செய்து 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹெட்மெயர், அஷ்வின், போல்ட், சஹால் என சர்வதேச கிரிக்கெட் களத்தில் முத்திரை பதித்த வீரர்களுடன் இளம் வீரர் குல்தீப் சென்னும் தன் அணியின் வெற்றி பெற உதவினார். கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட வெறும் 11 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து வெற்றி பெற செய்தார் குல்தீப் சென்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/bfn2Gy9