பெங்களூரு: நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து முழுவதுமாக விலகியுள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் தீபக் சாஹர். அதுகுறித்து அவர் உருக்கமான பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் 14 கோடி ரூபாய்க்கு ஆல்-ரவுண்டர் தீபக் சாஹரை வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அதற்கு முந்தைய சீசனிலும் அவர் சென்னை அணிக்காக விளையாடி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பவர்பிளேயில் விக்கெட்டுகளைக் கைப்பற்றுவதில் இவர் வல்லவர். பேட்டிங்கிலும் கைகொடுப்பார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/UkWmujQ