IPL 2022 | ‘கேப்டானாக எனது முதல் வெற்றியை என் மனைவிக்கு சமர்ப்பிக்கிறேன்’ - சிஎஸ்கே கேப்டன் ஜடேஜா 

மும்பை: கேப்டனாக தான் பெற்ற முதல் வெற்றியை தனது மனைவிக்கு சமர்ப்பிப்பதாக தெரிவித்துள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா.

நடப்பு ஐபிஎல் சீசனின் 22-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இந்த போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சிஎஸ்கே. இது இந்த சீசனில் சென்னைக்கு கிடைத்துள்ள முதல் வெற்றியாகும். இதற்கு முன்னதாக நான்கு போட்டிகளில் சென்னை அணி தோல்வியை தழுவியிருந்தது. அணியின் கூட்டு முயற்சியின் மூலம் சென்னை வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/FTEugbX