
மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போட்டியில் வெற்றி பெற்ற பிறகு கொண்டாட்டத்தை தவிர்த்து கேட்ச்களை கோட்டை விட்ட இளம் வீரர் முகேஷ் சவுத்ரிக்கு ஆறுதல் சொன்னார் மகேந்திர சிங் தோனி. இது ரசிகர்களின் கவனைத்தை ஈர்த்துள்ளது.
நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது சிஎஸ்கே. பெங்களூரு அணிக்கு எதிராக 23 ரன்கள் வித்தியாசத்தில் சென்னைக்கு இந்த வெற்றி கிடைத்துள்ளது. இந்த சீசனில் கேப்டன் பொறுப்பை துறந்து அணியில் அனுபவ வீரராக விளையாடி வருகிறார் முன்னாள் கேப்டன் தோனி. வெற்றி, தோல்வி என எதுவானாலும் அவர் அதிகம் ரியாக்ட் செய்ய மாட்டார். அவரது இந்த பக்குவம் சர்வதேச கிரிக்கெட் களம் தொடங்கி உள்ளூர் கிரிக்கெட் களம் வரை தொடர்ந்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/7jElydX